Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் மூலம் 1.7 லட்சம் பேர் பயணம்

பிப்ரவரி 07, 2019 08:41

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. 

டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகள் - பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. 

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் செல்ல வசதியாக ‘ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, செயிண்ட்தாமஸ் மவுண்ட் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஷேர் ஆட்டோ’ வசதிகள் உள்ளன. 

ஷேர் கார் வசதிகள் டி.எம்.எஸ், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ‘ஷேர் ஆட்டோ’, ஷேர் கார் மூலம் இதுவரை 1.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களுக்கு எளிதில் சென்றடைந்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்